ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார். ரஹ்மானும் தங்களது பிரிவு குறித்து அறிவிப்பை வெளியிட்டார். இது ரஹ்மான் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருந்தது. அடுத்த சில மணி நேரத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை குழுவில் பணியாற்றி வரும் மோகினி டேவும் தன்னுடைய கணவர் மார்க் ஹார்ட்சுச்சை பிரிந்து விட்டதாக அறிவித்தார். இருவரும் ஒரே நாளில் விவாகரத்து அறிவித்திருப்பதால் பலரும் இருவரையும் இணைத்து செய்திகளை பரப்பினர்.
தங்களது துணையை பிரிந்த இரண்டு தம்பதிகளின் விவகாரங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், ரஹ்மான் - மோகினி டே ஆகியோர் குறித்த வெளியான தகவல்களுக்கு ரஹ்மானின் மகன் அமீன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஒரு குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த அமீன், 'வயதை தவிர இந்த இருவருக்கும் இடையே என்ன வித்தியாசம்' என தன் தந்தையை ஒரு குழந்தை என்பது போல் பதிவிட்டிருக்கிறார். மேலும் அதில் கூறியிருப்பதாவது: என் அப்பா ஒரு லெஜண்ட். அவரின் வேலைக்காக மட்டும் அல்ல, இத்தனை ஆண்டுகளாக அவருக்கு கிடைத்திருக்கும் மரியாதை, அன்புக்காகவும் தான்.
அவரை பற்றி பொய்யான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரவுவது வேதனை அளிக்கிறது. ஒருவரின் வாழ்க்கை மற்றும் லெகசி பற்றி பேசும்போது உண்மையின் முக்கியத்துவம், மரியாதை நினைவில் இருக்கட்டும். தவறான தகவல்களை பரப்புவதை தயவு செய்து தவிர்க்கவும். அவரின் கண்ணியத்தை காப்போம். இவ்வாறு அமீன் கூறியுள்ளார்.
தன் தந்தையை தவறாக விமர்சிப்பவர்கள் குறித்து அமீன் வெளியிட்ட இந்த பதிவு வைரலாகியுள்ளது.